
ADONAI En Mel Paayum Nathiyalaiye – என் மேல் பாயும் நதியலையே –
ADONAI En Mel Paayum Nathiyalaiye – என் மேல் பாயும் நதியலையே –
என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே
உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்
அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1.வானத்தை திரையை போல
அழகாய் விரித்தவரே
வாஞ்சையாய் என்னை அணைத்து
ஆறுதல் தருபவரே-2-அடோனாய்
2.மேகத்தை இரதமாக்கி
காற்றில் செல்பவரே
உம் கையை நீர் திறக்க
நன்மைகள் வசமாகுமே-2
உம் வல்ல செயல்கள் அதிசயமே
மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே
உங்க கிருபை மட்டும் போதுமே
மகிமையாய் என்னை தாங்குமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3.எனக்காய் எல்லாமே
ஆயத்தம் செய்தவரே
எண்ணையால் என் தலையை
அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும்