இரட்சிக்கப்பட்ட ஒருவன் கர்த்தரை ஆராதிக்கவேண்டும் – Ratchikapatta oruvan kartharai aarathikkavendum
A saved person must worship God
ஒரு விசுவாசியின் கடமை அவனுடைய தேவனை ஆராதிக்க வேணடும் என்பதாகும். கிறிஸ்துவின் மூலம் நமக்காக தேவன் நிறைவேற்றியிருக்கிற மீட்பு தான் நம்முடைய ஆராதனையின் அடிப்படையாகும். ஆராதனையில் நாம் தேவனிடமிருந்து கேட்பதல்ல, பதிலாக துதி மற்றும் நன்றியுணர்வின் பலிகளை அவருக்கு அர்ப்பணிப்பதாகும் (எபி. 12:15). நாம் இரட்சிக்கப்படும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறுவது மட்டுமல்ல; தேவனுடைய பிரசன்னத்தில் ஆராதிப்பதற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கும் ஒரு ராஜரீக ஆசாரியக் கூட்டமாகவும் மாற்றுகிறார் (1 பேதுரு 2:4,5,9). கர்த்தர் சமாரிய ஸ்திரீயிடம் பேசும்போது (யோவான் 4:24) ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க வேண்டும் என்று சொன்னார்.’…. உண்மையாகத் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்வார்கள்.’ (யோவான் 4:23). தொழுது கொள்கிறது தேவனுடைய பிள்ளைகள் தான். அவர்கள் பிதாவை தொழுது கொள்கிறார்கள். ஆகவே, இரட்சிக்கப்படாதவர்கள் தேவனை தொழுது கொள்வதற்கு உரிமை இல்லை. தேவனை தொழுது கொள்வதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட இடமும் ஆச்சாரங்களும் தேவை இல்லை. புதிய ஏற்பாடு ஆராதிப்பதற்கான இடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் ஆராதிக்கப்படுகிறவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
புதிய ஏற்பாட்டு ஆராதனையில் கர்த்தருடைய மேஜை அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ‘அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்’ (அப்.2:42). கர்த்தருடைய பந்தி ஆசரிப்பதின் மூலம் நாம் கர்த்தரை நினைவு கூறுகிறோம் மற்றும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறோம் (லூக்கா 22:19). அப்பம் அவருடைய சரீரத்தையும் திராட்சை ரசம் அவருடைய இரத்தத்தையும் நினைவுப்படுத்துகிறது. அப்பமும், திராட்சை ரசமும் தன் குணாதியத்தில் கிறிஸ்துவின் சரீரமாகவோ, இரத்தமாகவோ மாறுவதில்லை. நாம் புசிப்பது அப்பம் தான். அதுபோல, பானம் பண்ணுவதும், திராட்சை ரசம் தான்.
கர்த்தருடைய பந்தியைப் பற்றின போதனை 1 கொரி. 11-ல் “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” 26ம் வசனத்தில் விளக்குகிறது. கர்த்தருடைய பந்தியில் பங்கெடுப்பதின் மூலம் பாவ மன்னிப்பு ஏற்படாது. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதின் மூலம் தங்கள் பாவங்கள் நீங்கப்பட்டவர்களும் மற்றும் இரட்சிக்கப்பட்டவர்களும் மட்டும்தான் இதில் பங்கெடுக்க வேண்டும். பெயர் அளவுக்குள்ள சபைகள் கர்த்தரால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு கட்டளைகளை (ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய மேஜை) இரட்சிப்பின் வழிகளாக மாறிவிட்டார்கள்.
- Christmas Bible Verses and Their Significance
- Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
- Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
- Motivational Bible Verses for Inspired Living
- Come For All Things Are Now Ready
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."