
இரட்சிப்பும் கிறிஸ்தவ வாழ்வும் – Salvation and the Christian Life
இரட்சிப்பும் கிறிஸ்தவ வாழ்வும் – Salvation and the Christian Life
இரட்சிப்பும் கிறிஸ்தவ வாழ்வும்
ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்தும இரட்சிப்பை விரும்புகிறவனாக இருக்கிறான். ஆனால் எப்படி அது முடியும்? அந்த இரட்சிப்பை அடைவதற்கும் பரலோகம் சென்றடைவதைப் பற்றியும் சிந்திக்கும் போது ஒரு பெரிய கேள்வி எழும்புகிறது. எதிலிருந்து ஒருவன் இரட்சிப்படைய வேண்டும். விடுதலை பெற வேண்டுமென்ற கேள்வி எழும்புகிறது? இதை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் காரியம் என்ன? எல்லா மதத்தின் போதனைகளிலிருந்தும், நம் சொந்த அனுபவத்திலிருந்தும் உள்ள வெளிச்சத்தின் அடிப்படையில் பாவத்திலிருந்து விடுதலைப் பெறுவதுதான் முக்கியமானதாக இருக்கிறது.
பாவம்தான் நம் சமாதானமில்லாமைக்கும் திருப்தியில்லாமைக்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. பாவிகளின் இரட்சகராக இயேசுகிறிஸ்து ஒருவர்தான் வெளிப்பட்டிருக்கிறார். அவர் பாவிகளை இரட்சிக்கிறவராக இருக்கிறபடியால் ‘உலக இரட்சகர்’ என்று அழைக்கப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் அறியப்பட்ட சீஷனாக இருந்த பவுல் சொல்கிறார்: “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ.1:15). ஆகவே, இயேசுகிறிஸ்து அருளும் இரட்சிப்பையும், ஒரு கனிநிறைந்த கிறிஸ்தவ வாழ்வின் விதிமுறைகளையும் பற்றி நாம் ஆராய்வோம். இதற்காக பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை நிரூபணமாக பயன்படுத்துவோம்.
மனிதன் பாவியாக இருக்கிறான். அதாவது அவனுடைய பிறப்பிலிருந்து பாவியாக இருக்கிறான். ஏனென்றால், முதல் மனிதனான ஆதாமின் பாவச் செயல்தான் காரணம். வேதாகமம் சொல்கிறது, “ஒரே மனிதனால் பாவமும், பாவத்தினால் மரணமும் உலகத்தில் பிரவேசித்தது.” (ரோமர் 5:12). எல்லா மனிதர்களும் ஆதாமின் சந்ததியாகவே இருக்கிறார்கள். ஆகவே, அவனுடைய எல்லா பிள்ளைகளும் அவனுடைய (ஆதாமுடைய) பாவ சுபாவத்தில் பிறந்திருக்கிறார்கள். நாம் செய்த பாவத்தினால் நாம் பாவிகளாக இருப்பதில்லை; நாம் அந்த பாவ சுபாவத்தில் பிறந்திருப்பதினால் பாவம் செய்கிறோம். நமக்குள் அடிப்படையான பாவ சுபாவமாயிருப்பதினால், நாம் பாவ செயல்களை செய்கிறோம்.